CINEMA

உண்மை அம்பலமாகும் தருணம்… சிறையிலிருந்து வெளியே வரும் ஈஸ்வரி! மாஸ் காட்டிய பாக்கியா..!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கீழே விழுந்த அன்று நடந்தது என்ன என்பது பாக்கியாவிற்கு தெரியவந்துள்ள நிலையில், கதையின் சுவாரசியம் அதிகரித்துள்ளது.

பாக்கியலட்சுமி   

பிரபல ரிவியில் ஒளிபரப்பாக்கிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் செய்யாத குற்றத்திற்காக ஈஸ்வரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை வெளியே கொண்டு வரமுடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். கோபியும் அவரது அம்மா ஈஸ்வரியை நம்பாமல் திட்டி அனுப்பியுள்ளார்.

ராதிகாவும், அவரது அம்மாவும் சேர்ந்து ஈஸ்வரியை பொலிசாரிடம் சிக்க வைத்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது பாக்கியாவிற்கு தெரிந்துள்ளது.

அதாவது மயூ தனது அம்மா எப்படி கீழே விழுந்தார் என்பதை கூறியுள்ளார். இதனால் உண்மை அம்பலமாகியுள்ள தருணத்தில் ஈஸ்வரியும் சிறையிலிருந்து வெளிவர உள்ளார்.

ஆனால் இதற்கு பின்பு கோபி ராதிகாவுடன் வாழ்வாரா? ஈஸ்வரி எடுக்கப்போகும் முடிவு என்ன? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.