CINEMA

போனை திருட வந்த ரோகினி! வசமாக முத்துவிடம் மாட்டிக்கொண்ட தருணம்..!

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் மொபைலை திருடிய ரோகினி அவருக்கு தெரியாமல் கட்டிலுக்கு அடியில் மறைந்து இருக்கின்றார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனாவை பழிவாங்குவதற்கு சிட்டியுடன் சேர்ந்து ரோகினியும் சதி வேலை செய்து வருகின்றார்.

முத்து மொபைலில் உள்ள சத்யாவின் காட்சியினை தற்போது ரோகினி அவதானித்துள்ள நிலையில், அதனை தனது போனுக்கு மாற்றுவதற்கு முயற்சிக்கின்றார்.

அத்தருணத்தில் திடீரென மொலைபல் போன் ஆஃப் ஆகிவிட்டதால், கட்டிலுக்கு அடியில் மறைந்து கொள்கின்றார். மீனாவிடம் முத்து போன் எடுக்கக் கூறுகின்றார். அங்கு போன் இல்லாததைக் கண்டு முத்துவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது.

கட்டிலுக்கு கீழே மறைந்திருக்கும் ரோகினி முத்துவிடம் மாட்டிக் கொள்வாரா என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.