ARTICLE

கம்யூட்டர் பின்னே பதுங்கியிருந்த பாம்பு… அசால்ட்டாக பிடித்த இளம்பெண்! 3 மில்லியன் பேர் ரசித்த காட்சி..!

கம்யூட்டர் பின்னே பதுங்கியிருந்த பாம்பு ஒன்றினை இளம்பெண் ஒருவர் அசால்ட்டாக பிடித்துச் செல்லும் காட்சி வைரலாகி வருகின்றது.

பொதுவாக பாம்புகள் என்றாலே மனிதர்கள் குலைநடுங்கும் நிலையில் தான் நிற்பார்கள். ஏனெனில் கடுமையான விஷத்தன்மை கொண்டுள்ளதுடன், நொடியில் உயிரையும் பறிக்கும்.

அதிலும் ராஜநாகம், நல்ல பாம்பு, கண்ணாடி மற்றும் கட்டு விரியன் பாம்புகள் தீவிர விஷத்தன்மை கொண்டது. இவை மனிதர்களை தீண்டினால் சில நொடிகளில் மரணிக்கும் நிலை ஏற்படும்.

இங்கு அப்படியான பாம்பை பெண் ஒருவர் அசால்ட்டாக பிடித்துச் செல்கின்றார். அதாவது கம்யூட்டர் பின்புறத்தில் பாம்பு ஒன்று பதுங்கியுள்ளது.

குறித்த பெண்ணிற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த இவர், அசால்ட்டாக பாம்பை பிடித்து சாக்கில் போட்டு சென்றுள்ளார். இக்காட்சியை 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அவதானித்து வருகின்றனர்.