Article

உலகத்தில் தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை… தனியாக பிரிந்து போன குட்டி வாத்து.. தாய் பாசத்தில் இந்த பெரிய வாத்து செய்ததை பாருங்கள்…!

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்

மனிதர்கள் மட்டும் தான் தங்கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் தாய்ப்பாசம்! சகல ஜீவன்களிலும் தங்கள் தாயை நேசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்.

அப்படித்தான் இங்கேயும்,தாய் வாத்தானது தனது குட்டிகளுடன் உணவுக்காக நீர்நிலை இறங்கி இறை தேட தொடங்கியது.அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குட்டி ஒன்று நீர் செல்லும் பள்ளத்தில் விழுந்தது.இதனைப் பார்த்த தாய், பதறி துடித்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தது. அதன்பின் பொறுமையாக யோசித்து, ஒரு குட்டிக்காக தனது மற்ற அனைத்து குட்டிகளை விடுத்து தனியாக குதித்தது. இதனைப் பார்த்த மற்ற குட்டிகளும் தன் தாயின் பின்னாலே துதித்து ஒன்று சேர்ந்தது. அதன் காட்சியை கீழே உள்ள வீடியோ இணைப்பில் காணலாம்