Article

இந்த ஆறு இராசியில் பெண் வரன் வந்தால் மிஸ் செஞ்சுடாதீங்க ஆண்களே.. பொக்கிஷமா பாத்துப்பாங்களாம்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா என வசீகரா திரைப்படத்தில் இளையதளபதி விஜய் பாடும் பாடலைப் போல சொந்த,பந்தங்களை அழைத்து திருமணத்தை சண்டை, சச்சரவுகள் இல்லாமலும், யாருக்கும் மனக்கசப்பு இல்லாமல் நடத்தி முடிப்பதும் பெரிய கலை தான். அதிலும் வரன் பார்க்கும் போதே சில ராசியில் பெண்கள் வந்தால் மிஸ் செய்யாமல் ஒகே சொல்லிவிடுவது நல்லது. சரி அது எந்த 6 ராசி எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மீனம்

இந்த ராசியில் குருவின் ஆதிக்கம் அதிகம். பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இந்த ராசியில் உள்ளது. இவர்கள் குரு, சனி, புதன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்டவர்கள். இந்த ராசி பெண்கள் அன்பும், அணுசரணையுமாக நடந்து கொள்பவர்கள். மென்மையான சுபாவம் கொண்டவர்கள். இவர்களது பேச்சில் ஒரு இனிமையும், அடக்கமும் இருக்கும். இவர்கள் கிடைக்கும் வரன் வந்தால் ஆண்கள் தவறவிடவே கூடாது.

சிம்மம்

இவர்களுக்கு சூரியனின் ஆதிக்கம் அதிகம். இந்த ராசியில் மகம், பூரம், சித்திரை 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன. சேது, சுக்கிரன், சூரிய ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்த பெண்களிடம் எப்போதும் நேர்மை இருக்கும். நம்பிக்கைக்கு பாத்தியமான இவர்கள் கடைசிகாலம் வரை கணவனோடு கைகோர்த்து நடப்பார்கள்.

கடகம்

இவர்கள் ராசிக்கு சந்திரனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். புனர் பூசம் 4ம் பாகம், பூசம், ஆயில்யம் நட்சத்திரம் இதில் வரும். இந்த ராசிக்கு குரு, சனி, புதன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இதனால் இவர்கள் நன்கு பாசமுள்ளவர்களாக இருப்பார்கள். குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துவதிலும் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள்.

மிதுனம்

புதனின் ஆதிக்கம் இவர்களுக்கு அதிகம். இந்த ராசியில் மிருகஷீரிடம் 2ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாகம் அமைந்துள்ளது. ராகு, செவ்வாய், குருவின் ஆதிக்கம் மிதுன ராசிக்கு அதிகம். இவர்கள் கோபம் நிறைந்தவர்களாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கை துணையாக அமைத்தால் லைபே ரொம்ப சுவாரஸ்யமாக மாறிவிடும்.

ரிஷபம்

கார்த்திகை 3ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக ரிஷப ராசிக்காரர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு இயல்பிலேயே காதலும், நேசமும் அதிகம். இவர்களுக்கு செவ்வாய், சந்திரன், சீரிய கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தும். இவர்கள் இயல்பாகவே அதீத பாசக்காரர்களாக இருப்பார்கள். இதனால் இந்த ராசியில் பிறந்த வரன் வந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஒகே சொல்லிவிடலாம்.

மேஷம்

அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தின் 1ம் பாகம் கொண்ட நட்சத்திரங்கள் இதில் உள்ளது. இவர்களை சுக்கிரன், கேது, சூரியன் கிரகங்கள் ஆதிக்கம் செலுத்தும். கோபமுள்ள இடத்தில் குணம் இருக்கும் எனச் சொல்வது இவர்களுக்கு ரொம்பப் பொருந்தும். இந்த ராசிக்காரர்கள் அதீத கோபம் உடையவர்களாகவும், அதேநேரம் நல்ல குணங்கள் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் கணவரை எப்போதும் மகிழ்வுடனே வைத்திருப்பதால் இவர்களைக் கட்டும் கணவன்களும் பாக்கியவான்கள். இந்த ராசியில் வரன் வந்தாலும் மிஸ் செய்து விடாதீர்கள்.