Article

மகிழ்ச்சியாக நடனமாடிய நபர்… திடீரென சரிந்து விழுந்து மரணித்த காட்சி..!

விநாயகர் சதுர்த்தி விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் இருவரில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.

இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா சமீபத்தில் நடந்தது. இதனை இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் விமர்சையாக கொண்டாடினர்.

ஆந்திராவில் உள்ள தர்மாவரம் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா நடைப்பெற்றது. இதில் பல சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது.

அப்பொழுது நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென சரிந்து விழுந்து மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். இந்த அதிர்ச்சிக் காட்சி தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.