Article

ஒருவரின் சோகத்தை கிண்டல் செய்தது சரியா? தொடரும் ஆண்டவரின் ஆட்டம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் போட்டியாளரான விஜய்யை சரமாரியாக பேசி சத்தம் போட்டதுடன், அவருக்கு வார்னிங் கார்டு கொடுத்துள்ளார்.

பிக்பாஸ்

பிரபல ரிவியில் கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் தொகுப்பாளராக இந்த ஆண்டும் கமல்ஹாசனே இருந்து வருகின்றார். உள்ளே சென்ற முதல் நாளே 6 போட்டியாளர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸில் இன்றைய இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.  

நடிகர் கமல்ஹாசன் இந்த சீசனில் போட்டியாளர்களின் தவறை காரசாரமாக விவாதித்து சரியான தீர்ப்பையும் கொடுத்து வருகின்றார். இந்நிலையில் கடந்த வாரம் தலைவராக இருந்த விஜய் மிகவும் மோசமாக நடந்து கொண்ட நிலையில், அவருக்கு மஞ்சள் நிற கார்டு கொடுத்து எச்சரிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலயைில் தற்போதைய ப்ரொமோ காட்சியில் மற்றொருவரும் அவ்வாறு பேசியுள்ளதாக பெண் போட்டியாளர் ஒருவர் கூறியு்ளளார். இதற்கு கமல் அளித்துள்ள விளக்கம் மறுபடியும் விஜய்யை எச்சரித்துக்ளது.