CINEMA

சங்கீதாவை விட்டு பிரிந்தாரா நடிகர் விஜய்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய்.

விஜய் சினிமாவில் மட்டுமல்ல பொதுச் சேவைகள் செய்வதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றார்.

அண்மையில், விஜய் தனது மனைவி சங்கீதாவை விட்டு பிரிந்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

பொதுவாக தனது படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் தான் செல்லும் கல்யாண சுப நிகழ்வுகளுக்கு தனது மனைவி சங்கீதாவுடன் தான் நடிகர் விஜய் செல்வார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே தனது மனைவி இல்லாமல் தனியாக தான் விஜய் வருகிறார்.

கடைசியாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பின் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வேறு எந்த ஒரு படத்தின் இசை வெளியிட்டு விழாவிலும் கலந்து கொள்ளவில்லை.

இந்தநிலையில், இவர்களுக்கிடையிலான பிரிவுக்கு விஜய்யின் அரசியல் நகர்வு தான் காரணம் என தமிழகத்தின் மூத்த செய்தியாளர் ஒருவர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விஜய் அரசியலுக்கு வருவது சங்கீதாவிற்கும், மகன் சஞ்சய்க்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. அரசியல் வேண்டாம் என இருவரும் கூறியுள்ளனர். இதுவரை நாம் சேர்த்த சொத்து அனைத்தும் அரசியலில் போய்விடும் என்று கூறினார்களாம். ஆனால் அவர்கள் பேச்சை விஜய் கேட்காமல் அரசியலில் களமிறங்குவது தான், விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும் மகன் சஞ்சய்யை விட்டு பிரிய காரணம் என குறித்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்.