CINEMA

Suchi Leaks -க்கு திரிஷாவே தான் போட்டோ கொடுத்தாங்க – மாட்டிவிட்ட சுசித்ரா..!

கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான Suchi Leaks தமிழ் திரைப்பட உலகயே அதிரவைத்த சம்பவமாகவும். இன்றளவும் இந்த விவகாரம் குறித்து பலரும் பேசி கொண்டே தான் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத கருப்பு பக்கமாக Suchi Leaks இருக்கிறது. பின்னணி பாடகி சுசித்ரா இது குறித்து அவ்வப்போது பேசி வருகின்றனர். அண்மையில் அவர் அளித்த பேட்டி பூகம்பமாக வெடித்துள்ளது.

விமர்சகர் பயில்வானை சரமாரியாக விமர்சித்தது மட்டுமின்றி நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து, தன் கணவர், திரிஷா என பலரையும் தாறுமாறாக விமர்சித்துள்ளார்.

குறிப்பாக நடிகை திரிஷா குறித்து பேசும் போது, Suchi Leaks விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் இழுத்துவிட்டார்கள் என்றும் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் நடிகர் தனுஷுடன் சேர்ந்து தான் இந்த Prank’ஐ செய்துவிட்டனர் என குற்றம்சாட்டினார்.

மேலும், Prank செய்ய எதாவது அக்கவுண்ட் தேவைப்படும் என்பதற்காக தன்னுடைய அக்கவுண்ட்டை கார்த்திக் குமார் கொடுத்துவிட்டார் என்று கூறிய சுசித்ரா, திரிஷா தனது புகைப்படங்களை அவரே கொடுத்தார் என்றும் அதனால் தான் பாதிக்கப்படாமல் திரிஷா இருக்கிறார் என்றார் சுசித்ரா. I’m Hurt அப்படினு ஒரு ட்வீட் போட்டுட்டு பாதிக்கப்படாம உட்கார்ந்து இருக்காங்க என தெரிவித்துள்ளார் சுசித்ரா.