ArticleNEWS

தண்டவாளத்தின் குறுக்கே படுத்துகிடந்த மாடு.. ரயில் ஓட்டுனர் செய்த செயலைப் பாருங்க.. பல லட்சம் பேர் வியந்த வீடியோ..!

இன்று நாமெல்லாம் அவசர உலகத்தில் இருக்கிறோம். அவசரம் என்னும் பெயரில் நமக்குள் இருக்கும் மனிதத்தன்மையும் முற்றாக அழிந்து வருகின்றது. சாலையில் சக மனிதன் அடிபட்டுக் கிடந்தால் கூட ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவோரை விரல் விட்டு எண்ணி விடலாம். தங்களுக்கு வேலை இருக்கிறது என ஒதுங்கிக் கொள்வோரே இன்று அதிகரித்து வருகின்றனர்.

இப்படியான சூழலில் ஒரு ரயில் ஓட்டுனர் செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றது. அப்படி அந்த லோகோ பைலட் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

ரயில் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு விரைந்து வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் குறுக்கே மாடு ஒன்று படுத்துக் கிடந்தது. இதை பகல் நேர ரயில் என்பதால் ரயிலின் இஞ்சினை ஓட்டிவந்த லோகோ பைலட் இதைக் கவனித்து விட்டார்.

உடனே அவர் மாட்டின் பக்கத்தில் வந்து ர்யிலை நிறுத்தினார். தொடர்ந்து சத்தமாக ஹார்ன் அடித்தபோதும், மாடு அங்கு இருந்து எழுந்திருக்கவில்லை. உடனே லோகோ பைலட் ரயிலில் இருந்து, இறக்கி நேரே போய் மாட்டை விரட்டிவிட்டுவிட்டு மீண்டும் ரயிலை எடுத்தார். இவரின் இந்த மனித நேய செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.