Article

ஆரத்தி எடுக்க வந்த கொழுந்தியாள்கள்… மாப்பிள்ளை ஏற்பட்ட பரிதாப நிலையை பாருங்க…!

திருமணம் முடிந்து முதன் முதலாக வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு கொழுந்திகள் எடுத்த ஆரத்தி வீடியோ இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

திருமணம் ஆயிரம் காலத்து பயிர். அது இரு மனங்களை மட்டுமல்லாது இரு குடும்பங்களையும் இணைக்கும் வைபவம் ஆகும். அதிலும் திருமணம் முடிந்து மணமகள் வீட்டுக்கு முதன் முதலாக வந்தால் மருமகளே…மருமகளே வா..வா பாடல் தான் எவர்க்ரீனாக போடப்படும். அதேபோல் தன் வீட்டுக்கு முதன் முதலாக வந்த மாப்பிள்ளைக்கு அவரது கொழுந்திகள் சேர்ந்து வித்தியாசமான முறையில் ஆரத்தி எடுத்து அசத்தியுள்ளனர்.

மக்கினாம்பட்டி என்னும் கிராமத்தில் தான் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. இதில் மூன்று கொழுந்திகள் சேர்ந்து மாடு மேய்ச்ச மச்சான் என தொடங்கி செம ரகளையாக ஒரு ஆரத்தி பாடல் பாடுகின்றனர். இதைக்கேட்டு மொத்த குடும்பமும் விழுந்து, விழுந்து சிரிக்கிறது. குறித்த அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ அந்த வீடியோ