ArticleCINEMA

எதிர்நீச்சலில் வேஷ்டி அணிந்து இறங்கி வந்த நபர் யார்… எதிர்பாராத திருப்பத்தால் அதிருப்தியில் மக்கள்..!

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் வேஷ்டி அணிந்து புதிய நபர் ஒருவர் களமிறங்கும் நிலையில், அவர் குணசேகரனா என்ற கேள்வி அதிகமாக எழுந்து வருகின்றது.

எதிர்நீச்சல்

கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.

மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ… இந்தாம்மா… என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது.

புதிய எண்ட்ரி யார்?

இந்நிலையில் குறித்த சீரியலின் நாயகனாக இருந்த குணசேகரன் திடீரென மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், இவருக்காக கதையையே மாற்றியுள்ளனர்.

குணசேகரன் நடித்த காட்சிகள் கைவசம் இருந்தாலும் அதனை ஒளிபரப்ப வேண்டாம் என்ற முடிவில் சீரியல் குழுவினர் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் குணசேகரன் இறந்த பின்பு கதையை மாற்றியுள்ளனர். ஆம் அவருக்கு ஒரு அண்ணன் இருப்பதாகவும் அவர் இறந்துவிட்டதாகவும் கொண்டு செல்கின்றனர்.

குணசேகரன் கதாபாத்தில் நடிப்பதற்கு வேல ராமமூர்த்தி, பசுபதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், நேற்றைய தினம் எபிசோட் முடிவில் வெள்ளை வேஷ்டி அணிந்து நபர் ஒருவர் காரிலிருந்து இறங்கும் காட்சி காட்டப்பட்டுள்ளது.

இது குணசேகரனா அல்லது அவரது அண்ணனா என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது. மேலும் இன்றைய எபிசோட்டை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாகவே இருந்து வருகின்றனர்.