NEWS

தந்தையின் வீம்புக்கு பலியான இளம் திருமண ஜோடிகள்..இந்த காலத்துல இப்படி எல்லாம் நடக்குதா நெஞ்சை பதை பதைக்க வைக்கும் தூத்துக்குடி உண்மை சம்பவம்..!

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியை சார்ந்த வசந்தகுமார் மகன் மாரிசெல்வம்(23). இவர் சிப்பிங் கம்பெணி ஒன்றில் பணியில் இருந்துள்ளார். இவரும்  தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சார்ந்த கார்த்திகா(23) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக  காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு கார்த்திகா தரப்பில் அவரது பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் ஒரே பகுதியில் வசித்து வந்த மாரிசெல்வம் குடும்பத்தினர் கார்த்திகா குடும்பத்தின் மிரட்டலின் பேரில் அந்த பகுதியில் இருந்து காலி செய்து முருகேசன் நகர் பகுதிக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர்தான் குடியேறி உள்ளனர்.

இந்நிலையில்  கடந்த 3-நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேவர்ஜெயந்தி அன்று கார்த்திகா வீட்டை விட்டு ஒடிவந்து மாரிசெல்வத்தை கோவில்பட்டியில் வைத்து திருமணம் செய்துள்ளார். இருவரும் திருமணம் முடித்து மாரிசெல்வம் வீட்டில் அவரது தாய் தந்தையுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இளம் தம்பதிகள் இருவரும் வீட்டில் இருக்கும்போது திடீரென மூன்று மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த கும்பல் ஒன்று கடுமையான ஆயுதங்களை கொண்டு மாரிசெல்வம், கார்த்திகா ஆகிய இருவரையும் சராமரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணையை முடிக்கிவிட்டதுடன், 3 தனிப்படைகள் தப்பிசென்ற குற்றவாளிகளை பிடிக்க அமைக்கப்பட்டன. முதல்கட்ட தேடுதல் வேட்டையில் மணப்பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சந்தேகத்தின்பேரில் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெண்ணின் உறவினர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் கூறுகின்றனர். பதற்றமான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் காவல்துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.