Article

இந்தக் குட்டிப்பையனின் மனசு இருக்கே அதுதான் தெய்வம்.. வைரலாகும் காட்சி இதோ…!

பொதுவாகவே குழந்தைகள் அழுதால் பெரியவர்கள் நாம் சமாதானம் செய்வோம். ஆனால் இங்கே ஒரு குட்டிப் பொடியனின் அழுகையை, சக பொடியனே சமாதானம் செய்த காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே நம்மை வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். வளரிளம் பருவத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டையையும், அவர்களின் ரசனையையும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள். குழந்தை இல்லாததன் வலி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மட்டும்தான் தெரியும்.

இங்கே பள்ளிக்கூட விழாவில் தன் வயதொத்த பொடியன் ஒருவன் எதற்கோ அழுதுகொண்டிருந்தான். உடனே அவனது பக்கத்தில் இருந்த அதே வயதொத்த பொடியன், அழுது கொண்டிருந்த சக மாணவனின் கண்களைத் துடைத்துவிட்டு சமாதானம் செய்கிறான். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. இருந்தும் இந்த மனசுதான் சார் தெய்வம்…இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.