Article

சோகத்தில் ஆழ்ந்த சரிகமப மேடை: இலங்கை இளைஞரின் வார்த்தையால் கதறியழுத நடுவர்கள்…!

பிரபல ரிவியில் இன்று ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த போட்டியாளர் ஒருவரால் நடுவர்கள் கண்கலங்கி அழுதுள்ளனர்.

பிரபல ரிவியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப ஆகும். சாமானிய மக்களின் கனவுகளை நினைவாக்கும் இந்நிகழ்ச்சியால் பலரது இசை திறமைகள் வெளி கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் சரிகமப சீசன் 3 முடிவடைந்ததை தொடர்ந்து இன்று சீசன் 4 ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து போட்டியாளராக கலந்து கொண்ட இந்திரஜித் என்பவர் பேசிய வார்த்தைகளை கேட்டு நடுவர்கள் கண்கலங்கி அழுது இருக்கிறார்கள். இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, ஸ்வேதா மோகன், கே. எஸ் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கே. எஸ் ரவிக்குமார் 49 படங்களை இயக்கிய அனுபவத்தை இந்த மேடையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.