Article

கண்களில் ததும்பிய கண்ணீர்’.. முதல் ஆளாக ஓடி வந்த குஷ்பூ..! விஜய் ஆண்டனிக்கு நேரில் ஆறுதல்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனிதமிழ் சினிமாவில் முன்னனி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டையில் டிடிகே சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.இவரது மகள் மீரா(16) தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சற்று மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.இந்நிலையில் நேற்று படுக்கைக்கு சென்ற சாரா தனது துப்பட்டாவால் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அதிகாலை 3 மணிக்கு அவதானித்த வீட்டினர், பணியாளர்கள் உதவியுடன் மகளின் உடலை மீட்டு காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். தற்போது இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.