CINEMA

அடேய் திருட்டுப் பயலே இப்படி வாய் கூசமா பொய் சொல்றியேடா.? பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய டுவிஸ்ட்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றைய நாட்களை விட இந்த வாரம் சற்று சூடுபிடித்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் 4 அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றது.

மக்களின் நெஞ்சங்களை வென்ற இந்த சீரியல் 5 ஆண்டுகளாக வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

உண்மையை உடைக்கும் மீனா அப்பா

இந்த நிலையில், இந்த வாரம் மீனாவின் அப்பாவை வெட்டிய வழக்கில் ஜீவா மற்றும் கதிர் விசாரணையின்றி கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதனால் கடுப்பான மீனா கோபித்து கொண்டு அவருடைய அப்பாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் உண்மையில் இவர்கள் இருவரும் மீனாவின் அப்பாவை மிரட்டியது மட்டும் தான்.

ஆனால் மீனாவின் தங்கை மாப்பிள்ளை தான் இதற்கு முக்கிய காரணம். மீனாவின் அப்பா கண் விழித்து நடந்த விடயங்களை மீனாவிடம் கூறுகிறார்.

இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்கள் விறுவிறுப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.