Article

காகம் தலையில் கொத்தினால் ?வீட்டுக்கு காகம் அடிக்கடி வந்தால் என்ன பலன்

சூரிய புத்திரர்கள் எமனும் சனியும் சகோதரர்கள் எமலோகத்தின் வாசலில் காகங்கள் அமர்ந்திருக்குமாம். சனிபகவானின் வாகனம் காக்கை. காகங்கள் வடிவத்தில் நம்முன்னோர்களை பார்க்கிறோம்.

நம் வீட்டிற்கு வரும் முன்னோர்களுக்கு உணவு கொடுப்பது போல நம்முடைய வீட்டு வாசலுக்கு வரும் காகங்களுக்கு உணவு கொடுப்பதனால் எமன் மகிழ்ச்சியடைவாராம். முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது வழக்கத்தில் உள்ளது.

இன்றைக்கும் கிராமப்புறங்களில், காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்றும், ஏதோ நல்ல தகவல் வரப்போவதாகவும் பேசிக்கொள்வதைக் கேட்கலாம்.